இலங்கை இளைஞர் யுவதிகள் மத்தியில் கால்நடைத்துரையில் அறிவினையும் திறனையும் வளர்க்கும் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக கரந்தகொல்லையில் அமையப் பெற்றுள்ள இலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை விலங்ககின்றது. இலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை கால்நடை வளர்ப்புத் துறைக்கு இருவருட டிப்ளோமா பாடநெறியினை வழங்குகின்றது. இப்பாடநெறி தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நடாத்தப்படுகின்றன. இப்பபடசாலையில் வழங்கப்படும் டிப்ளோமா அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலையின் செயற்பாடுகள் கா.உ.சு.திணைக்களத்தின் மனிதவள அபிவிருத்திப் பிரிவினால் மேற் கொள்ளப்படுகின்றன. இது ஒவ்வொறு கல்வியாண்டின் போதும் 100 மாணவர்கள் உள்வாங்குவதுடன் அவர்களுக்கு போதிய வசதிகளுடன் வதிவிடப் பயிற்சியை வழங்குகின்றது. கால்நடைப் பண்ணை அலகுகள் கால்நடைத்துறையில் போதிய அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை 8 விரிவரையாளர்களையும் கொண்டுள்ளது. அத்தடன் இவர்கள் பல்வேறு துறைகளிலும் நிபுனத்துவம் பெற்றவர்களாவர் பாடநெறி இலவசமாக வழங்கப்படுகின்றது. பாடநெறி கட்டமைப்பானது கோட்பாடுகள், செயன்முறை பயிற்சிகள் மற்றும் 6 மாதகால தனியார் கால்நடை முயற்சியான்மை (பொறி அமைப்பில்) கருத்திட்ட வேலைகளைக் கொண்டுள்ளது.