கால்நடை வளர்ப்பு பயிற்சி நிலையம் உலர் வலயத்தில் அனுராதபுர மாவட்டத்தில் சீப்புக் குளத்தில் அமையப் பெற்றுள்ளது. இடைநிலை மட்ட கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கால்நடை பண்ணையாளர்களுக்கு செயன்முறை பயிற்சிகளை வழங்குவதற்கு பொறுத்தமான வசதிகளை கொண்டு 100 ஹெக்டேயர் காணி நிலப்பரப்பில் இவ்வளர்ப்பு பாடசாலை அமைந்துள்ளது. பசு, எருமை, கோழி, ஆடு செம்மறியாடு, பன்றி, முயல் போன்ற மாதிரிப் பண்ணைகளையும் மற்றும் பசும் புல் வளர்ப்பு என்பன ஸ்தாபிக்கப்பட்டு செயன்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மனிதவள அபிவிருத்தி அலகினால் கால்நடை வளர்ப்பு பயிற்சி நிலையம் செயற்படுத்தப்படுகின்றது. சுயதொழில் மேம்பாட்டு மீதான குறுகிய கால சான்றிதழ் பாட நெறிகளும் நாட்டின் வேலையற்ற இளைஞர் யுவதிகளின் முயற்சியான்மை அபிவிருத்திப் பாடநெறியினையும் வழங்குகின்றது. பாடநெறி காலப் பகுதியானது அதன் தலைப்புக்கேற்ப 2 வாரம் முதல் 2 மாதம் வரை வேறுபடுகின்றன. இச்சான்றிதழ் பாடநெறியானது மிகவும் கேள்விக் கூடியதாக வேலையற்ற இளைஞர் யுவதிகளிடம் காணப்படுகின்றது. அத்துடன் பாற்பண்ணை முகாமை கோழிப்பண்ணை முகாமை மற்றும் பால் பதனிடும் தொழில்நுட்பம் என்பன பிரதான வகுதியாகும்.