இலங்கையில் சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கால்நடைத் துறையில் முதன்மை நிறுவனமாக இருத்தல்.
கால்நடைகளின் ஆரோக்கியத்தை பராமரித்தல், உற்பத்தியை அதிகரித்தல், உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் உணவு முன் ஏற்பாட்டிற்கு பங்களிப்பு செய்தல் என்பவற்றிநூடாக கால்நடைத் துறையில் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கு தொழில்நுட்ப வழிகாட்டல் மற்றும் ஆதரவினையும் வழங்குதல்.
1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் கீழ் கால்நடை உற்பத்தி சகாதாரத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு கால்நடை துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அன்றைய அரசாங்கம் அதாவது 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசினால் இத்திணைக்களம் உருவாக்கப்பட்டது. கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஆரம்ப செயற்பாடுகள் விவசாயத் திணைக்களத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. இப்பிரிவு பிரதானமாக கால்நடை நோய் பாதுகாப்பு, குனப்படுத்தல், சேவைகளுக்கான ஏற்பாடு அபிவிருத்தி களஞ்சியங்களை வினியோகித்தல் மற்றும் சிறிய அளவிலான விவசாயிகளுக்கு விரிவாக்கல் சேவைகளை ஓரளவு விரிவாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தல் என்பவற்றில் அதன் கவனத்தை செலுத்துகின்றது. அன்றைய அரசினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட திறந்த பொருளாதார கொள்கைக்கு முகம் கொடுப்பதில் புதிதாக ஆரம்பித்து வைக்பட்ட திணைக்ளத்திற்கு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தன. அத்துடன் அபிவிருத்தி செயற்பாடுகளை அமுல்படுத்த வேண்டி இருந்தது. கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் 1989 இல் இருந்து பல்வேறு அமைச்சுக்களின் கீழ் 2006 ஆம் ஆண்டுவரை செயற்பட்டன. தற்போது இத்திணைக்களம் கால்நடைவள கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. 1988 இல் மாகாண சபைகளினது உருவாக்கத்துடன் கா.உ.சு.திணைக்களத்தின் வெளிக்கள செயற்பாடுகள் 8 மாகாண கா.உ.சு.திணைக்களத்தின் பால் பகிர்ந்தளிக்கப்பட்டன. அன்மையில் உருவாக்கப்பட்ட வடமாகாணத்துடன் இதன் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு இறுதியின் போது சகல கால்நடை பண்ணைகளின் பொருப்புக்களையும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு மாற்றம் செய்யப்பட்டது. மத்திய கா.உ.சு.திணைக்களம் தொழில்நுட்ப தலைமைத்துவம் வள்ளுனர்களது ஊட்டல் சேவையினையும் மா.கா.உ.சு.திணைக்களம் வழங்குவதுடன் பிரதேச மிருக வைத்திய பணிமனைகள் மிருக வைத்தியர்களினால் முகாமை செய்யப்படுவதுடன் இதுவே கா.உ.சு.திணைக்களத்தின் பிரதான செயற்பாட்டு அலகாகும். 337 பிரதேச மிருக வைத்திய பணிமனைகள் நாடு முழுவதிலும் பரந்து காணப்படுகின்றன. இப்பணிமனைகள் ம.கா.உ.சு.திணைக்களத்தின் கீழ் செயற்படுகின்றன. சகல கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சிகளும் இதன் மூலம் செயற்படுத்தப்படுகின்றன.