செயற்கை முறை சினைப்படுத்தல் நிலையம் பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் செயற்கை முறை சினைப்படுத்தல் சேவையை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கை சுவீஸ் கால்நடை அபிவிருத்தி கருத்திட்டத்தின் நிதி உதவியுடன் 1975 ஆம் ஆண்டு இந்நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையத்தின் மொத்த நிலப்பரப்பு 60 ஏக்கர்களாகும். அதில் கிட்டத்தட்ட 10 ஏக்கர்களில் கட்டிடம் (அலுவலகம், மாட்டுத் தொழுவ அலுவலகம், தொழிலாளர் விடுதிகள்) அமையப் பெற்றுள்ளது மீதமான நிலப்பரப்பில் 50 ஏக்கர் காணியில் பல் நிலமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
விந்து கொடையாளிகளினால் 8 காளைகள் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்நிலையத்தின் இனவிருத்திகளாக பராமரிப்பது சகிவால் மற்றும் மூறா இனமாகும். மேலும் செயற்கை முறை சினைப்படுத்தல் தொழில்நுட்பவியலாளர்களுக்கான பயிற்சிகள் இந்நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
புல் மற்றம் பசும் பால் அபிவிருத்தி நிகழ்சித் திட்டத்தின் கீழ் பசும் புல் வளர்ப்பு 25 ஏக்கர்களில் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.