விந்து சேகரிப்பு நிலையம் முதன் முதலில் 1947 இல் கெட்டம்பேயில் ஸ்தாபிக்கப்பட்டது. முதலாவது செயற்கைமுறை சினைப்படுத்தல் பசு கண்டி மீவதுரை பண்ணையில் உருவாக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் இந்நிலையத்தில் குழந்தை விந்துகள் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டன.
செயற்கை முறை சினைப்படுத்தல் நிலையம் 1962 ஆம் ஆண்டு குண்டசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டது. 1975 இல் கால்நடை உற்பத்தி சகாதாரதப் பிரிவு விலங்குகளின் இனவிருத்தி செயற்பாடுகளின் மேம்பாட்டிற்காக சுவீடன் அரசாங்கத்திடம் இருந்து (FA)/SIDA கால்நடை அபிவிருத்தி மற்றும் இனவிருத்தி மேம்பாட்டு கருத்திட்டம் உதவியை பெற்றுக் கொண்டது. 1976 இல் இக்கருத்திட்டத்தின் ஊடாக எருமை விந்தை உறையவைப்பதனை அறிமுகப்படுத்தியது. அத்துடன் உறைவிந்தை பயன்படுத்தி செயற்கைமுறை சினைப்படுத்தல் முறை விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது இந்நிலையம் கா.உ.சு.தி. கால்நடை இனவிருத்தி பிரிவின் கீழ் உள்ளது. விந்து கொடையாளிகளிடம் இருந்து வாரத்திற்கு இரு தடவை விந்து சேகரித்தல் செயற்படுத்துதல் உறையவிடல் போன்றன மேற்கொள்ளப்படுகின்றன. உறைவிந்து மற்றும் திரவ நைதரசன் பகிர்வு நிகழ்ச்சித்திட்டம் இந்நிலையத்தினாலேயே கையாளப்படுகின்றன. சகல வெளிக்கல செயற்கை முறை சினைப்படுத்தல் நிலையங்களும் மூன்று கிழமைக்கு ஒரு தடவை விந்தினையும் திரவ நைதரசனையும் பெற்றுக் கொள்கின்றன.
இதற்கும் மேலாக விந்து மற்றும் திரவ நைதரசன் என்பவற்றை வழங்குவதுடன் குண்டசாலை செயற்கை முறை சினைப்படுத்தல் நிலையங்களில் ஏனைய உள்ளீடுகளும் வழங்கப்படுகின்றன.